திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனர் கணபதி (55) கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த போது, திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை காண்பிக்க இறங்கிய போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி அருகே லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (55). லாரி ஓட்டுநரான இவர் நேற்று மதியம் வழக்கம் போல் கோவை மாவட்டம் வீரகேரளம் பகுதியில் இருந்து கண்டெய்னர் லாரியில் டீ தூள் லோடு ஏற்றிக்கொண்டு கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், திருமலையம்பாளையம் அருகேயுள்ள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுப்பதற்காக லாரியை விட்டு இறங்கி நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்த சக லாரி ஓட்டுநர்கள் கணபதியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கணபதி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

லாரி ஓட்டுநர் கணபதி மரணம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை சாவடியில் ஆவணங்களை கொடுக்க வந்த லாரி ஓட்டுனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...