கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை குத்தகைக்கு மட்டுமே விடப்படும்..! - நிதியமைச்சர் பி.டி.ஆர் தகவல்!

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு வழங்கும் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம்/யூனியன் அரசாங்கத்திற்கு குத்தகைக்கு மட்டுமே விடப்படும் என்றும், அதன் உரிமையை மத்திய அரசுக்கு முழுமையாக வழங்கப்படாது எனவும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை அதன் உரிமையை முழுவதுமாக மத்திய அரசுக்கு மாற்றப்படாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு தேவையான நிலத்தை குத்தகைக்கு மட்டுமே வழங்கும். முன்பு போல உரிமையை மத்திய அரசுக்கு மாற்றாது.

விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் இயக்கப்படும் வரை குத்தகைத் தொகை குறைந்தபட்ச டோக்கன் மதிப்பில் வைக்கப்படும் என்ற ஷரத்து குத்தகையில் அடங்கும்.

விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்தால், தமிழகத்திற்கான குத்தகை தொகையானது நிலத்தின் அப்போதைய சந்தை மதிப்பைப் பிரதிபலிக்கும், அல்லது விமான நிலையத்தில் அப்போதைய சமமான பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.

மாநில அரசின் அனுமதியின்றி (டோக்கன் மதிப்பு மற்றும் குத்தகைக் கட்டணத்தில்) நிலத்தை ஒரு தனியார் ஆபரேட்டருக்கு (சலுகை குத்தகை வாடகையில்) துணை குத்தகைக்கு வழங்க அவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்ற இந்திய விமான நிலைய ஆணையத்தின் பரிந்துரையை தமிழ்நாடு நிராகரித்து விட்டது.

இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...