கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

துடியலூர் பேருந்து நிலையம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: துடியலூர் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதனை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.



கோடை வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

அதேபோல், அதிமுக சார்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை அதிமுக புறநகர் வடக்குமாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் கவிசந்திரமோகன், ஐ.டி.விங்க் மாவட்ட செயலாளர் மணிகண்டன், அவை தலைவர் ஐ.டி.ஐ. ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் வனிதாமணி, மாரிச்சாமி, வட்ட செயலாளர்கள் சாந்திபூஷன், பந்தல்வீடு பிரகாஷ், ஜெயக்குமார், சுரேஷ், சுரேஷ்பாபு, காளிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...