ரமலான் பெருநாளை ஒட்டி துடியலூரில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை!

ரமலான் பெருநாளை ஒட்டி கோவை துடியலூர் ஹிதாயத்துள் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வடமதுரை எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில் திடல் தொழுகை நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.



கோவை: ரமலான் பெருநாளை ஒட்டி கோவை துடியலூரில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ரமலான் பெருநாள் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு வைத்து இன்றைய தினம் ஷவ்வால் பிறை 1 ல் கொண்டாடப்படும். இந்த பெருநாளானது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் ஓர் சிறந்த பண்டிகை ஆகும்.



ஈதுல் பித்ரு தொழுகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வரும் சூழலில், கோவை மாவட்டம் துடியலூர் ஹிதாயத்துள் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வடமதுரை எஸ்.எஸ். கமலேஷ் திருமண மண்டபத்தில் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் என சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.



துடியலூர் பள்ளிவாசல் செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த தொழுகைக்கு இமாம் சாஹிர் ஜைனி தொழுகவைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இமாமிற்கு பள்ளிவாசல் தலைவர் சுல்தான் மைதீன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் பொருளாளர் கனி மேற்பார்வையில் நடைபெற்றது.



மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சுற்று வட்டார பகுதி இஸ்லாமியர்கள் மார்க்க அறிஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்கள் தொழுகையை நிறைவேற்றி அதன் பின்னர் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டி அணைத்து பரிமாறிக் கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...