உடுமலையில் கழிவு நீர் வாகனங்களை பதிவு செய்து உரிமம் பெற நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!

உடுமலை நகராட்சியில் உள்ள கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் குறித்த தகவல்களை நகராட்சியில் பதிவு செய்து, 2 ஆண்டுகள் செல்லும் வகையிலான உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையர் சத்தியநாதன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை, நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உடுமலை நகராட்சியில், மனித கழிவுகள், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால், 2 ஆண்டு செல்லும் வகையில், விண்ணப்பித்த 15 நாட்களில் உரிமம் வழங்கப்படுகிறது.



எனவே, கழிவுநீரை அகற்றும் வாகனங்கள் குறித்து, உடுமலை நகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை, பொது இடங்களில் கொட்டக்கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும். உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...