திருப்பூரில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் - கூட்டுத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

திருப்பூர் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, திருப்பூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பங்கேற்றனர்.


திருப்பூர்: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடக் கூடிய முக்கிய பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.



ரமலான் பண்டிகையையொட்டி திருப்பூரின் மங்களம், பல்லடம், பெரியதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.



திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது.



இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...