சென்னை தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் - விவசாய சங்கம் அறிவிப்பு

தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு 720 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வருகின்ற 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எழுகாம்வலசு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோனேரிப்பட்டி, பொன்னிவாடி, எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 120 நபர்களிடம் நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு நல்லதங்காள் அணை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.



இந்த அணை கட்டுவதற்கு நஷ்ட ஈடாக ஒரு ஏக்கருக்கு 9000 மானாவாரி பூமிக்கும் ஒரு ஏக்கர் தோட்ட பூமிக்கு 27000 நஷ்ட ஈடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேற்படி தொகை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து நஷ்டஈடு தொகை அதிகம் பெறுவதற்கு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மானாவாரி பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாயும் தோட்ட பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாயும் மேற்படி தொகைக்கு 15 சதவீத வட்டியும் ஆறுதல் தொகை மற்றும் கூடுதல் சிறப்பு தொகை மற்றும் செலவு தொகையை வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை 120 விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்காததால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் வருகின்ற 13-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 120 விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...