கோவையில் மருமகளை தாக்கிய மாமனார், மாமியார் மீது வழக்கு!

பொள்ளாச்சி வடக்குத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனப்ரியா(33). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சான்றிதழ் எடுக்க கணவர் வீட்டிற்கு வந்த மோகன பிரியாவை மாமனார், மாமியார் தாக்கியதால் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: மகாலிங்கபுரத்தில் மருமகளை தாக்கிய மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன பிரியா (33). இவர் கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களாக மோகனப்பிரியா கணவரை பிரிந்து பொள்ளாச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள தனது கணவரது வீட்டில் உள்ள கல்லூரி படிப்பு சான்றிதழ்களை எடுக்க நேற்று மோகன பிரியா வெள்ளலூர் வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த மோகனபிரியாவின் மாமனார் மாதையன் (68), மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் மோகனப்பிரியாவை தகாத வார்த்தைகளால், பேசியதோடு அவரை தாக்கியுள்ளனர்.

இதில் முகத்தில் காயமடைந்த மோகனப்பிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மோகனப்பிரியா போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் மாமனார் மாதையன் மற்றும் மாமியார் விஜயலட்சுமி மீது போத்தனூர் போலீசார் பெண் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...