திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் தலைமையில் மனு அளித்த மக்கள்

திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களை காலி செய்ய வலியுறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமையில் மனு அளித்தனர்.



திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 37ஆவது வார்டு ரயில்வே லைன் பகுதியில் 112 குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.



அவர்கள் தங்கள் வசித்து வரும் பகுதிக்கு இதுவரை வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி வரக்கூடிய சூழ்நிலையில் திடீரென வருவாய்த்துறையினர் வண்டி பாதை புறம்போக்கு நிலம் என்பதால் காலி செய்ய வற்புறுத்தியுள்ளனர்.



இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு அந்த இடத்திலேயே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...