உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், பயிர்கள் அனைத்தும் கருகுகின்றன. பயிர்களை காப்பாற்ற அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கல்லாபுரம், ராம குளம் உள்ளிட்ட ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு, கடந்தாண்டு, மே 16ல் தண்ணீர் திறக்கப்பட்டு, இரு போக சாகுபடிக்கு நீர் வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 31ல் நிறைவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கல்லாபுரம், ராமகுளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி தாமதமாக துவக்கப்பட்டது. அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அறுவடைக்கு தயாராக ஒரு மாதம் வரை உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுகின்றன. இந்த பயிர்களை காப்பாற்ற நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கல்லாபுரம், ராம குளம் உள்ளிட்ட ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு, கடந்தாண்டு, மே 16ல் தண்ணீர் திறக்கப்பட்டு, இரு போக சாகுபடிக்கு நீர் வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 31ல் நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கல்லாபுரம், ராமகுளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி தாமதமாக துவக்கப்பட்டது. அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அறுவடைக்கு தயாராக ஒரு மாதம் வரை உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுகின்றன. இந்த பயிர்களை காப்பாற்ற நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.