தாராபுரத்தில் பழமையான வேப்ப மரம் வெட்டிச் சாய்ப்பு - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 50 ஆண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் வெட்டி சாய்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.


திருப்பூர்: தாராபுரம் சி.எஸ்.ஐ. நகரில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று சாலையோரம் இருந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு நிழல் தந்துவந்தது. இந்த மரத்தின் நிழலில் அப்பகுதி பொதுமக்கள் இளைப்பாரி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த வேப்பமரத்தை ஒரு சிலர் அடியோடு வெட்டிச்சாய்த்தனர். பொதுவாக வருவாய்த்துறையினர் முன்அனுமதி பெற்று மரத்தை வெட்ட வேண்டும். ஆனால், தாராபுரம் பகுதியில் பல இடங்களில் இது போன்ற மரங்களை வெட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.



தமிழக அரசு வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், 50ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவது கொடூரமான செயல் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், தாராபுரம் வருவாய் துறையினர் சாலை மற்றும் தெருவோரம் உள்ள மரங்களை வெட்டி கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.



50 வயதான இந்த வேப்ப மரம் வெட்டப்பட்ட சம்பவம் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது,

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...