கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.


கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ இன்று தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

கோவை கோட்டைமேடு சங்கமேஷ்வரர் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். மேலும் இந்த வழக்கில் கோவை மாநகர போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை கடந்த ஆண்டு அக் 27 ல் என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) க்கு மாற்றப்பட்டது. இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் கோவை மாநகரில் பொதுமக்கள் கூடும் ரயில்நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை சென்னை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின், முகமது தல்ஹா, பைரோஷ், முகமது ரியாஷ், நவாஷ், அஷ்ரப் கான் ஆகியோர் மீது என்.ஐ.ஏ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...