கோவை வடவள்ளி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தை வீடு துடைத்து விட்டு வைக்கப்பட்ட தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வடவள்ளி அருகே தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி அடுத்த இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் ஐடி ஊழியர் பாக்கியராஜ் (33). இவருக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 வயதில் வர்ஷிகா, வர்ணிகா என்ற இரட்டை பெண் குழந்தைகளும் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல சமையல் வேலைகளை முடித்த காயத்ரி, தண்ணீர் ஊற்றி வீட்டை சுத்தம் செய்து விட்டு, பாதியளவு தண்ணீருடன் பக்கெட்டை வீட்டின் ஒரு அறையில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
வழக்கம் போல காயத்ரி காலையில் சமைத்துக் கொண்டிருந்த போது, இரட்டை குழந்தைகள் அறையில் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது குழந்தை வர்ஷிகா (1) தண்ணீர் பக்கெட் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, பக்கெட் தண்ணீருக்குள் தவறி தலைகீழாக விழுந்துள்ளது.

இதனால் அங்கிருந்த வர்ணிகா சத்தம் போடவே, அழுகை சத்தம் கேட்டு காயத்ரி வெளியே வந்து பார்தத போது, குழந்தை வர்ஷிகா தண்ணீர் மூழ்கியிருந்தது தெரியவந்தது. குழந்தையை மீட்ட காயத்ரி கணவர் பாக்கியராஜ் உதவியுடன் குழந்தையை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குழந்தை பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வடவள்ளி அடுத்த இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் ஐடி ஊழியர் பாக்கியராஜ் (33). இவருக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 வயதில் வர்ஷிகா, வர்ணிகா என்ற இரட்டை பெண் குழந்தைகளும் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல சமையல் வேலைகளை முடித்த காயத்ரி, தண்ணீர் ஊற்றி வீட்டை சுத்தம் செய்து விட்டு, பாதியளவு தண்ணீருடன் பக்கெட்டை வீட்டின் ஒரு அறையில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
வழக்கம் போல காயத்ரி காலையில் சமைத்துக் கொண்டிருந்த போது, இரட்டை குழந்தைகள் அறையில் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது குழந்தை வர்ஷிகா (1) தண்ணீர் பக்கெட் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, பக்கெட் தண்ணீருக்குள் தவறி தலைகீழாக விழுந்துள்ளது.
இதனால் அங்கிருந்த வர்ணிகா சத்தம் போடவே, அழுகை சத்தம் கேட்டு காயத்ரி வெளியே வந்து பார்தத போது, குழந்தை வர்ஷிகா தண்ணீர் மூழ்கியிருந்தது தெரியவந்தது. குழந்தையை மீட்ட காயத்ரி கணவர் பாக்கியராஜ் உதவியுடன் குழந்தையை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குழந்தை பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.