என்.ஐ.ஏ சட்டம் ஜிஹாதிகளுக்கு எதிரானது, இஸ்லாமியர்களுக்கு அல்ல..! - பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தகவல்

கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என திமுகவினர் பொய்யாக பரப்பி வருவதாகவும், ஊழல்வாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வந்தவர் தான் பாஜக தலைவர் அண்ணாமலை எனவும் கூறினார்.


கோவை: பாஜக கொண்டு வந்த என்.ஐ.ஏ சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



இஸ்லாமியர், கிறிஸ்தவ, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துடன் இந்தியாவில் உள்ளனர். தமிழகத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பொய்யாக பரப்பப்பட்டு வருகிறது. ஊழல்வாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வந்தவர் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

காங்கிரசும், திமுகவும் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர். என்.ஐ.ஏ முஸ்லிம்களை அல்ல ஜிஹாதிகளை கைது செய்கிறது. என்.ஐ.ஏ., ஜிஹாதிகளுக்கு எதிரானது.

கர்நாடகத்தில் குஜராத்தில் இருந்தது போல முன்னேற்றம் உண்டாகும் என்பதால் மிகப்பெரிய வெற்றியை பாஜக அடையும். கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் பாஜக நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களை பெறும். குறைந்த விலையில், வசதியாக புனித யாத்திரை செல்லும் வகையில் ஹஜ் கமிட்டியின் புதிய கொள்கை உள்ளது, என்றார்.

இவரை தொடர்ந்து, பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி பேசியதாவது,

தமிழகத்தில் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் தங்களுக்கான தேவையை, பிரச்னைகளை விண்ணப்பங்களாக கொடுத்து வருகின்றனர். பாஜகவிற்கு சிறுபான்மையினர் இடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளை நடைபெற உள்ள இப்தார் விருந்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்

உத்தரபிரதேசத்தில் நடந்த அக்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொலை வழக்கு சம்மந்தமாக தமிழகத்தில் தவறாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான உண்மை தகவலை இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...