வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநில பெண் ஊழியர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!

வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளி சீதாமுனிகுமாரியை சிறுத்தை ஒன்று தாக்கியதில், கை மற்றும் கால்களில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வடமாநில பெண் ஊழியர் ஒருவர் சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனிடையே அடிக்கடி சிறுத்தைகள், யானைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அருகேயுள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் குடியிருந்து வரும் வடமாநில தொழிலாளி சீதாமுனிகுமாரி (22), சிறுகுன்றா பகுதியில் உள்ள 35வது நம்பர் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



இந்நிலையில், காயமடைந்த வடமாநில பெண்ணை வால்பாறை வன துறையினர், திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகரமன்ற துணை தலைவர் செந்தில்குமார், நகர துணை செயலாளர் சரவண பாண்டியன், வினோத்குமார், டேன்சிங், ஜெயராம் ஆகியோர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், இந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்டறிந்து வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...