கோவையில் ரூ.19.50 லட்சம்‌ மதிப்பில் பாலம் கட்டும் பணியை துவங்கி வைத்த மேயர் கல்பனா!

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.19.50 லட்சம்‌ மதிப்பில் பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்த மேயர் கல்பனா ஆனந்தகுமார், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகாலில்‌ தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்றி புனரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.35க்கு உட்பட்ட இடையர்பாளையம்‌, அன்புநகர்‌ 5வது வீதியில்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட உள்ள பால‌த்திற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.



இதேபோல், கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.45 சாய்பாபா காலனி, அண்ணா மார்க்கெட்‌ பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ மழைநீர் வடிகாலில்‌ தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்றி பழுதடைந்த மழைநீர் வடிகாலை புனரமைக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



தொடர்ந்து கோவை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட‌ வார்டு எண்‌.45 சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம்‌ சாலை, புதிய பேருந்து நிலையத்தில்‌ பயணிகள்‌ பயன்பாட்டிற்காக உள்ள கழிவறை சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா, கழிவறையை சுகாதாரமாக பராமரித்திட சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோல், மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.45க்கு உட்பட்ட சாய்பாபா காலனி, அம்மாசைகோனார்‌ வீதியில்‌ ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகாலில்‌ உள்ள செடி, கொடிகளை அகற்ற பழுதடைந்த மழைநீர்‌ வடிகாலை புனரமைக்க மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

இந்த நிகழ்வுகளில், மேற்கு மண்டல தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள்‌ சம்பத்‌, ராமமூர்த்தி, உதவி ஆணையர்‌ சேகா்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ ஜீவராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...