கோவையில் சிறுவனுக்கு சூடு வைத்த வளர்ப்பு தந்தை - போலீசில் புகார்!

கோவையில் 7வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த வளர்ப்பு தந்தை மீது, சிறுவனின் தந்தை உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் சிறுவனுக்கு வளர்ப்பு தந்தை சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம் (33), இவர் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் சர்மதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சர்மதா இப்ராஹிமை பிரிந்து தனது மகனுடன் ஆட்டோ ஓட்டுநரான சாதிக்(38) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு உக்கடம் புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் குழந்தையின் வளர்ப்பு தந்தையான சாதிக் கடந்த 15 ஆம் தேதி தோசை கரண்டியால் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து கோவை வந்த தந்தை இப்ராஹிடம் சிறுவன் நடந்ததை கூறியுள்ளார். சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை இப்ராஹிம் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...