பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.
கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எதிரில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் கே.வி.சுப்பிரமணியன், பொருளாளர் ஜெயபிரகாஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் முத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஜெயக்குமார், நகரக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், சேர்மன் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணை சேர்மன் கௌதமன், நகரக் கழக துணை செயலாளர்கள் தர்மராஜ், பாத்திமா அக்பர் MC, மாவட்ட பிரதிநிதி நாகராஜ் MC, மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.