திருப்பூரில் மருத்துவம் பயிலாமல் சிகிச்சையளித்து வந்த போலி மருத்துவர் கைது!

திருப்பூர் அடுத்த கரட்டாங்காடு பகுதியில் மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அண்ணாதுரை என்பவரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே முறையாக மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த கரட்டாங்காடு பகுதியில் முறையான அனுமதி பெறாமல் மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார்கள் வந்துள்ளன.



இதனை தொடர்ந்து புகார்கள் தொடர்பாக தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையிலான அதிகாரிகள் கரட்டாங்காடு பகுதியில் செயல்பட்டு வந்த (கிளினிக்) மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.



அப்போது கடந்த 2019ஆம் ஆண்டு வேறு ஒருவர் பெயரில் பெற்ற உரிமத்தை கொண்டு அண்ணாதுரை என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஆயுர்வேத மருத்துவம் படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவமனைக்கு கடந்த 13ம் தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



இதனை தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்த அண்ணாதுரையிடம் மாவட்ட சுகாதார பணிகள் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆயுர்வேதம் பயிலாமல் மருத்துவம் பார்த்ததும் அவர் வைத்திருந்த சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு சித்த மருத்துவ கழகத்தில் பதிவு செய்ய இயலாது என தெரியவந்தது.

மேலும் சுகாதார துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலி மருத்துவர் அண்ணாதுரையை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறிய அளவில் நடத்தப்படும் மருத்துவமனைகளை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...