மாதத்தவணையில் வீட்டுமனை தருவதாக பல லட்சம் மோசடி - கோவை காவல் ஆணையரிடம் புகார்

கோவையில் மாத தவணையில் பணம் கட்டுபவர்களுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாநகரை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி ரோட்டில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, கணவன் - மனைவியான கோவிந்தராஜ், ராஜலட்சுமி ஆகியோர் நடத்தி வந்தனர்.



இவர்கள் மாத தவணையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை விற்பனை செய்யப்படும் என கவர்ச்சிகரமான பல அறிவிப்புகளை வெளியிட்டதை, நம்பி கோவையை சேர்ந்த ஏராளமானோர் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மாதம் தோறும் ரூ.2000, ரூ.2750 என பணம் செலுத்திவந்தனர்.



ஒவ்வொருவரும் மொத்தமாக தலா ரூ.2 லட்சம், ரூ. 3 லட்சம் என பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், முழு தொகையை செலுத்திய பின்னரும் வீட்டுமனையை கிரையம் செய்து கொடுக்காமல் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் பொதுமக்களை ஏமாற்றிவிட்டதுடன், பணத்தை திரும்ப கேட்டபோது பணம் கொடுக்காமல் மிரட்டியதால் காவல் துறையில் புகார் அளித்ததாக தெரிவித்தனர்.



மிகுந்த சிரமத்திடையே மன உளைச்சலுடன் இருந்து வருவதால், பணம் வசூல் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திய தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...