கோவை மயிலேரிபாளையத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு!

கோவை மயிலேரிபாளையம் ஊராட்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன், மரக்கன்றுகளை நட்டு இந்த பணியை தொடக்கி வைத்தார்.


கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.



முதல்கட்டமாக மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மயிலேரிபாளையம் ஊராட்சியில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன் இந்த பணிகளை மரக்கன்றுகளை நடவு செய்து துவங்கி வைத்தார்.



ஊராட்சி ஊழியர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து வேப்பை, மாமரம், கொய்யா உள்ளிட்ட ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

இது குறித்து திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கூறுகையில்,

கலைஞர் நூற்றாண்டு மற்றும் முதல்வர் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம். இந்த மரக்கன்றுகளை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் வேலிகள் அமைத்தும், தண்ணீர் ஊற்றியும் பராமரிக்க உள்ளனர்.

மேலும் கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை அடுத்தடுத்து நடவு செய்யும் பணிகளை கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.செந்தில்குமார், மயிலேரிபாளையம் ஊராட்சி தலைவர் கோமதி திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பி.திருமூர்த்தி, ஊராட்சி துணை தலைவர் என்.சுப்பிரமணியம், மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...