கோவையில் சிறுவனை பறவையை போல் கூண்டில் அடைத்து கொண்டு சென்ற நபர் - வீடியோ வைரல்!

உக்கடம் - ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தில் பறவைகள் கூண்டில் 5 வயது சிறுவனை அடைத்து கொண்டு சென்ற சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்து கொண்டு பயணிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



கோவை: ஈச்சனாரி அருகே சிறுவனை கோழிகள் அடைக்கும் கூண்டில் வைத்து அழைத்து சென்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.



கோவை மாவட்டம் உக்கடம் - ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிறிய ரக கூண்டிற்குள் சிறுவனை அமர வைத்தபடி இருசக்கர வாகனத்தை இயக்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.



அப்பகுதியில் டிவிஎஸ் XL சூப்பர் வாகனத்தை இளைஞர் ஒருவர் இயக்கும் நிலையில், வாகனத்தின் முன்புறம் மற்றொரு இளைஞர் அமர்ந்துள்ளார். வாகனத்தில் பின்புறம் சரக்கு பொருள்களை வைக்கும் இடத்தில் சிறியரக கூண்டு ஒன்றில், சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்தபடி பயணித்துள்ளனர்.

இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பினும் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை வைத்து பயணம் செய்ய கூடாது என வலைதளவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...