கோவை துடியலூரியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறப்பு!

கோடை காலத்தில் துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீர், மோர் குடித்து தாகத்தை தணித்துக் கொண்டனர்.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



கோடை வெயிலில் வெப்பத்தை தவிர்க்க ஆண்டுதோறும் அசோகபுரம் பகுதி பொதுமக்களுக்கு அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இலவச நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதில் அப்பகுதி பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் என நீர், மோர் அருந்தி தங்களது தாகத்தை தணித்துக் கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சிவகுமார், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் அசோக் குமார், ரவிச்சந்திரன், விஸ்வநாதன், விஜயன், மோகன் குமார், நவநீதகிருஷ்ணன், பிரதாப், பிரேம்குமார், சங்கர், கனகராஜ், வடிவேல், பிரதீப் ராஜ், வீரா, தீனதயாளன், புஷ்பராஜ், சம்பத்குமார், பாலமுருகன், ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...