தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கியதை கண்டித்து கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கோவை: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில், முகலாயர்களின் வரலாற்றையும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மெளலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கி உள்ளது.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய வரலாற்றை மத்திய இருட்டடிப்பு செய்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்ட செயலாளர் அசாருதீன், மாவட்டத் துணைச் செயலாளர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய வரலாற்றை மத்திய இருட்டடிப்பு செய்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்ட செயலாளர் அசாருதீன், மாவட்டத் துணைச் செயலாளர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.