மௌலானா அபுல் கலாம் ஆசாத் பாடப்பகுதி நீக்கம் - கோவையில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கியதை கண்டித்து கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.


கோவை: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு அண்மையில் வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில், முகலாயர்களின் வரலாற்றையும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மெளலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும் நீக்கி உள்ளது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய வரலாற்றை மத்திய இருட்டடிப்பு செய்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்டத் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்ட செயலாளர் அசாருதீன், மாவட்டத் துணைச் செயலாளர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...