இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை : தி இந்து நாளிதழின் செய்தியாளர் சவுந்தர்ய ப்ரீத்தா பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை மாதந்தோறும் இரண்டு மற்றும் நான்காவது ஞாயிறன்று நடைபெறுகிறது. அதன்படி, இரண்டாவது நிகழ்வாக இன்று பயிற்சிப் பட்டறை துவங்கியது.  இந்த நிக்ழவில் "தி இந்து" நாளிதழின் செய்தியாளர் சவுந்தரிய ப்ரீதா சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார்.  'ஊடகவியலாளர் நெறிமுறைகள் மற்றும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிக்கையாளர்களிடையே உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:- 



இன்றைய காலகட்டத்தில் பலர் தொழில்துறை சார்ந்த செய்திகளை படிப்பதில்லை. ஊடகவியலாளர்களிடையேயும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பில் சில தயக்கம் தெரிகிறது. கோவை மாநகரம் முழுக்க முழுக்க தொழில் துறை சார்ந்த நகரம். இத்துறை சார்பில் செய்தியாளர்கள் எழுதும் ஒவ்வொரு செய்தியும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது மாவட்டத்தில் வருவாயையும் அதிகரிக்கச் செய்யும். 

தொழில் துறை தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் போது அவர்களுடைய பிரச்சனைகளினூடே அச்செய்தியை கொடுக்க வேண்டும். அதோடு, சாதக மற்றும் பாதகங்களையும் மிக எளிமையான நடையில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.



தற்போது, கோவையில் உள்ள ஒவ்வொரு தனியார் நிறுவனமும், புதிதாக தொடங்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் தங்கள் பங்குகளை முதலீடு செய்கிறார்கள். இது தவிர பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கோவையில் தொடங்கபட்டு வருகிறது. இதனால் பலர் வேலைவாய்ப்பை பெருகின்றனர். எனவே, இது முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த செய்திக்களமாக உள்ளது. இளம் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தொழில் துறை சார்ந்த செய்தி சேகரிப்பு முறையை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வப்போது, மூத்த பத்திரிக்கையாளர் அல்லது வல்லுனர்கள் அலோசனைகளை கேட்டறிந்து செய்தி சேகரித்தால் உள்ளூர் செய்தி ஒன்றையும் தேசிய செய்தியாக்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தின் செயலாளர் ஷாதிக் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Pra...

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

Coimbatore மாவட்டத்தில் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீட...

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...