கோவையில் பாஜக அலுவலக ஊழியர் மீது தாக்குதல் - 9 பேர் கைது

கோவை பனைமரத்தூரை சேர்ந்த தென்னரசு, பாஜக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பனைமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பது குறித்து போலீசாருக்கு தென்னரசு தகவல் அளித்ததாக கருதி, அவரை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்ததாக ஒருவரை தாக்கிய 9பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பனைமரத்தூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் தென்னரசு (48). இவர் கோவை பாஜக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இது குறித்து தென்னரசு போலீசாரிடம் கூறியதாக எண்ணி, அப்பகுதி இளைஞர்கள் தென்னரசுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தாக்கியதோடு, அவரின் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து அவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பனைமரத்தூரை சேர்ந்த அரவிந்த் (21), சதீஸ்குமார் (20), விஜயகுமார் (19), பத்மா (53), அம்பிகா (45), ரோகினி (41), நந்தினி (42) உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் புகார் அளித்துள்ள தென்னரசு மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...