தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனை இணைந்து உலக சுகாதார தினத்தை முன்னிட்டு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் சாரா நர்சிங் கல்லூரி மாணவிகள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்: தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனை இணைந்து உலக சுகாதார தினத்தை முன்னிட்டு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரி பயிற்சி மாணவிகள் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கினார். குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, வழக்கறிஞர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.