திருப்பூர் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்யும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழகத்தில் சமீப காலமாக வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு சில வழக்கறிஞர்கள் கூலிபடைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.



எனவே, தமிழக வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய , தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...