காங்கேயம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய போதை இளைஞர்கள் - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வழிவிடாமல் சென்ற போதை இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஹாரன் அடித்தததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அரசு பேருந்து ஓட்டுநரை நடுரோட்டில் வைத்து சராமரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



திருப்பூர்: ஈரோட்டில் இருந்து பழனிக்கு பழனி கிளையை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. பேருந்தை மேகநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது அரச்சலூர் அருகே வடபழனி பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர், போதையில் அரசு பேருந்திற்கு வழிவிடாமல் வந்ததாக கூறப்படுகிறது.

உரிய நேரத்தில் பேருந்தை இயக்க வேண்டும் என்பதால் பேருந்து ஓட்டுநர் இளைஞர்களின் வாகனங்களை நோக்கி ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே போதையில் இருந்த இளைஞர்கள் மீண்டும் பேருந்துக்கு வழி விடாமல் சென்றுள்ளனர்.



காங்கேயம் அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் நின்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து கிளம்பியபோது இருசக்க வாகனங்களில் பேருந்தை வழிமறித்த போதை இளைஞர்கள் சட்டை இல்லாமல் அரைகுறை ஆடையுடன் பேருந்தை நிறுத்த சொல்லி கலாட்டாவில் ஈடுபட்டனர்.



பின் பேருந்து ஓட்டுநரின் இருக்கைக்குச் சென்ற அந்த இளைஞர்கள், ஓட்டுநரான மேகநாதன் சட்டையைப் பிடித்து இழுத்து, நடுரோட்டில் வைத்து சராமாரியாக தாக்கியுள்ளனர்.

சம்பவத்தை பார்த்த பேருந்து பயணிகள், போதை இளைஞர்களிடமிருந்து அரசு பேருந்து ஓட்டுநரை மீட்டு அனுப்பி வைத்தனர். தாக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர் மேகநாதன், காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் , அந்த புகாரின் பேரில் போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்படுவதை பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் எடுத்து வெளியிட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...