தாராபுரம் அருகே காரில் 45 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது!

திருப்பூர் அருகே தாராபுரம் காரில் 5.50 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாழப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டார். மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையில் அவர் சிக்கினார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டாடா இன்டிகா என்ற வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். இதனால், மேலும் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு காவல்துறையினர், அவரை மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது அவர், காரில் சுமார் 45 கிலோ அளவுள்ள 5.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்பனைக்காக இவர் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட நபர், வாழப்பாடியைச் சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் ஆவார். இதையடுத்து, அவரிடமிருந்து டாட்டா இன்டிகா கார் மற்றும் 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் தமிழ்ச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...