கோவை அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ - 8வது நாளில் முழுமையாக அணைத்த வனத்துறை!

கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்த காட்டுத் தீயை, வனத்துறையினரின் தொடர் போராட்டத்தால் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. புகை வரும் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ஆலாந்துறை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பிடித்தது. இதனை தொடர்ந்து, கடந்த 7 நாட்களாக காட்டுத் தீயை அணைக்க மதுக்கரை, கோவை, மேட்டுபாளையம், சிறுமுகை, நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட வனச்சரகத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர பணிகளை மேற்கொண்டனர்.



கூடுதலாக, இராணுவ ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பெரிய அளவிலான தீ அணைக்கப்பட்டது. மீதமுள்ள இடங்களில் எரிந்து வந்த காட்டுத் தீயை, நேற்று நள்ளிரவு வனத்துறை ஊழியர்கள் போராடி முழுமையாக அணைத்தனர்.

இதைத் தொடர்ந்து, 8 ஆவது நாளான இன்று புகை ஏற்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 7 நாட்களாக எரிந்த காட்டுத் தீயில், பல ஹெக்டேர் பரப்பளவில் இருந்து மரங்கள், செடிகொடிகள், புற்கள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...