கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்த காட்டுத் தீயை, வனத்துறையினரின் தொடர் போராட்டத்தால் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. புகை வரும் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை ஆலாந்துறை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பிடித்தது. இதனை தொடர்ந்து, கடந்த 7 நாட்களாக காட்டுத் தீயை அணைக்க மதுக்கரை, கோவை, மேட்டுபாளையம், சிறுமுகை, நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட வனச்சரகத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர பணிகளை மேற்கொண்டனர்.

கூடுதலாக, இராணுவ ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பெரிய அளவிலான தீ அணைக்கப்பட்டது. மீதமுள்ள இடங்களில் எரிந்து வந்த காட்டுத் தீயை, நேற்று நள்ளிரவு வனத்துறை ஊழியர்கள் போராடி முழுமையாக அணைத்தனர்.
இதைத் தொடர்ந்து, 8 ஆவது நாளான இன்று புகை ஏற்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 7 நாட்களாக எரிந்த காட்டுத் தீயில், பல ஹெக்டேர் பரப்பளவில் இருந்து மரங்கள், செடிகொடிகள், புற்கள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக, இராணுவ ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி பெரிய அளவிலான தீ அணைக்கப்பட்டது. மீதமுள்ள இடங்களில் எரிந்து வந்த காட்டுத் தீயை, நேற்று நள்ளிரவு வனத்துறை ஊழியர்கள் போராடி முழுமையாக அணைத்தனர்.
இதைத் தொடர்ந்து, 8 ஆவது நாளான இன்று புகை ஏற்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 7 நாட்களாக எரிந்த காட்டுத் தீயில், பல ஹெக்டேர் பரப்பளவில் இருந்து மரங்கள், செடிகொடிகள், புற்கள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.