கோவை ஒத்தகால் மண்டபம் அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்திய நல்ல மணி என்பவரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1125 கிலோ ரேஷன் அரசியை பறிமுதல் செய்தனர்.
கோவை: ஒத்தகால்மண்டபம் அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று ஒத்தகால் மண்டபம்-வழுக்கல் ரோடு குமிட்டிபதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகளில் 1,125 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோவை ஓட்டி வந்த நல்ல மணி (23) என்பவரை கைது செய்தனர்.
மேலும், அரிசி கடத்தல் தொடர்பாக, வேலந்தாவளம் மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று ஒத்தகால் மண்டபம்-வழுக்கல் ரோடு குமிட்டிபதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகளில் 1,125 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோவை ஓட்டி வந்த நல்ல மணி (23) என்பவரை கைது செய்தனர்.
மேலும், அரிசி கடத்தல் தொடர்பாக, வேலந்தாவளம் மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.