20 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற பெண் காவலர் பூங்கொடிக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் வழங்கி பாராட்டினார்.
கோவை: காவல்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய பெண் காவலருக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கோவை சரக பணியிடை பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண் காவலர் பூங்கொடி. இவருக்கு கடந்த ஜனவரி 26ல் சென்னையில் குடியரசு தின அணிவகுப்பின் போது, 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும், “தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டது.
இந்நிலையில், பெண் காவலர் பூங்கொடிக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழ், கோவை சரக காவல்துறை அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நேரில் வழங்கி அவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோவை சரக பணியிடை பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண் காவலர் பூங்கொடி. இவருக்கு கடந்த ஜனவரி 26ல் சென்னையில் குடியரசு தின அணிவகுப்பின் போது, 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும், “தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம்” வழங்கப்பட்டது.
இந்நிலையில், பெண் காவலர் பூங்கொடிக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நற்பணி சான்றிதழ், கோவை சரக காவல்துறை அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் நேரில் வழங்கி அவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.