தாராபுரத்தில் திமுக சார்பில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு!

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பகுதியில் திமுக சார்பில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள 17 வது வார்டு பகுதியில் திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியானது, ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ளும் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், அவைத்தலைவர் கதிரவன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...