தாராபுரம் அருகே மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த நெகிழிக்கான மாற்று பொருள் கண்காட்சி!

தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் இயற்கை பொருள் கண்காட்சி மற்றும் நெகிழிக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் இயற்கை பொருள் கண்காட்சி நடைபெற்றது.

நெகிழி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நெகிழிக்கு மாற்றாக இயற்கை பொருள் கண்காட்சி மற்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.

கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குனர் வரலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விமலா கந்தசாமி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் சிறப்புரையாற்றிய நிலையில், தாராபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம், மூலனூர், குண்டடம், பொங்கலூர் வட்டார மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வறுமை ஒழிப்பு சங்க பொறுப்பாளர்கள், சுய உதவி குழுக்கள் உறுப்பினர்கள் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நெகிழி ஒழிப்பு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், நெகிழியை பற்றியும், நெகிழியால் ஏற்படும் கொடிய நோய்களை பற்றியும் மாசற்ற தமிழகத்தை உருவாக்க நெகிழியை ஒழிப்போம் என்று உறுதிமொழி ஏற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...