பொள்ளாச்சி - கோவை சாலையில் ரூ.7 கோடி மதிப்பில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவக்கம்!

பொள்ளாச்சி - கோவை சாலையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உட்மைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி உள்ளிட்ட 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வர் நிதிஒதுக்கீடு செய்தார்.



இதனையடுத்து பொள்ளாச்சி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக கோவை சாலையில உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.



3.2 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள பேருந்து நிலையத்தில் 40 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 64 கடைகள், 2 தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அறை, பாலூட்டும் அறை, போக்குவரத்து அலுவலகம், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் 18 மாத காலத்திற்குள் நிறைவடையும் என நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...