பல்லடம் அருகே தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு தடை!

பல்லடம் அருகே தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 32 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள நிலையில், இந்தாண்டு திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு தடை விதிப்பதை கண்டித்து பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, அப்பகுதி மக்கள், அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளிபாளையம் பகுதியில் கடந்த 32 ஆண்டுகளாக தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் 60 அடி குண்டம், பொங்கல் சாட்டு விழா கொண்டாடப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தாண்டு ஊர்மக்கள் விழா எடுத்து வரும் நிலையில் தனி நபர்களின் புகார் அடிப்படையில் விழாவிற்கு இந்துசமய அறநிலைத்துறை தற்காலிக தடை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.



இதனை கண்டிக்கும் விதமாக கொங்காலி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் ராமசாமி மற்றும் காமநாயக்கன் பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, பஞ்சாயத்து தலைவர் சாந்தினி சம்பத்குமார் உள்ளிட்ட நான்கு தரப்பினர் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...