கொரோனா பரவல் எதிரொலி - கோவை நீதிமன்றங்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் கட்டாய முகக்கவசம் அணியும் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


கோவை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் கடந்த ஏப்.,10 முதல், சில வழக்குகள் நேரடியாகவும், சில வழக்குகள், இணையதளம் மூலமும் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வசதியையும், வழக்குகளை 'இ- பைலிங்' முறையில் தாக்கல் செய்யும் வசதியையும், வழக்கறிஞர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, தமிழகம், புதுச்சேரியில் உள்ள உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில், முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருநதார்.



அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர், முகக்கவசம் அணிவது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவுவது ஆகிய நடவடிக்கைகள் கட்டாய மாக்கப்படுகின்றன.



வழக்கு பட்டியலில் இடம்பெறாத நிலையில், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகங்களில், கிருமி நாசினி தெளிக்க வேண்டும். நீதிமன்ற அறை நுழைவு வாயில், முக்கிய இடங்களில் 'சானிடைசர்' வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...