மருத்துவக் கழிவுகள் அகற்றும் விவகாரம் - கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கழிவுகளை எடுக்க பெறப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும், மாநகராட்சி நிர்வாகமே கழிவுகளை குறைந்த கட்டணத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரா மெடிக்கல் லேப் எஜுகேஷன் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரா மெடிக்கல் லேப் எஜுகேஷன் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



இதில், மருத்துவ கழிவுகளை குறைந்த கட்டணத்தில் மாநகராட்சி நிர்வாகமே எடுக்க வேண்டும் என்றும், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலைப்பேட்டையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர ஆய்வகங்களுக்கு மருத்துவக் கழிவுகளை எடுக்க தனியார் நிறுவனத்தால் மாதம்தோறும் வசூலிக்கப்படும் 2000 முதல் 2800 வரையிலான கட்டணத்தை 750 ஆக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.



பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, 2 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கோவை வடக்கு மற்றும் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கும் இவர்கள் மனுவாக அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...