கோவையில் 'லியோ' பட அப்டேட் கேட்ட ரசிகர்கள் - நடிகை திரிஷா பதில்

கோவையில் பொன்னியின் செல்வன் 2ம் பாக விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷாவிடம், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் அப்டேட் குறித்து ரசிர்கள் கேள்வி எழுப்பினர். லியோ படத்தின் ஷூட்டிங்கில் இருந்துதான் வருவதாகக் கூறிய திரிஷா, மற்ற விஷயங்களை லியோ பட நிகழ்ச்சியின்போது பேசுவோம் என்று கூறினார்.


கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் மாலில் நடைபெற்றபொன்னியின் செல்வன் இரண்டாம் பாக விளம்பர நிகழ்ச்சியில் நடிகை திரிஷா பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, நான் கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து தற்போது கோவைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.



அப்போது, திரிஷாவிடம் விஜய் நடித்து வரும் LEOபடத்தின் அப்டேட் குறித்து ரசிகர் கேட்டு, LEO, LEO என முழக்கமிட்டனர். ஆனால், திரிஷா அது குறித்து பதிலளிக்காமல்,நான் தற்போது LEO பட சூட்டிங்கில் இருந்துதான் வருகிறேன்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உங்கள் தளபதி நல்லா இருக்காங்க.மற்றவற்றை LEO நிகழ்ச்சியில் பேசிக் கொள்ளலாம் என்றார்.



ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் சில திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதன்படி, திரிஷாவிடம் குந்தவைக்கு சுயம்வரம் எப்போது? சுயம்வரத்திற்கு நாங்கள் வரலாமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, என் உயிர் அவர்களுடையது என ரசிகர்களை கை காண்பித்தார்.



பிறகு அருண்மொழி வர்மன், வந்தியதேவன், ஆதித்த கரிகாலனை 1,2,3 என மனத்தில் உள்ளதைபோல் வரிசைப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்டதற்கு,PS2 புரோமோசன் என்பதால்,என் இதயத்தில் இருப்பது இப்போதைக்கு VT(வந்தியதேவன்) தான் என திரிஷா பதிலளித்தார்.



தொடர்ந்து பேசிய அவர், கோவையில் மூன்று விஷயங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும். ஒன்று கோவை மக்கள் பேசும் தமிழ்.. இரண்டாவது உங்களுடைய சாப்பாடு.. மூன்றாவது கோவையில் எப்போதுமே இருக்கும் அமைதி...என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...