கோவை அருகே 7வது நாளாக எரியும் காட்டுத் தீ - மாலைக்குள் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை தகவல்

கோவை ஆலாந்துறை மேற்குதொடர்ச்சி மலையில் 7 ஆவது பற்றி எரியும் காட்டு தீ, இன்று மாலைக்குள் அணைக்கப்பட்டுவிடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90 சதவீத தீ ஏற்கனவே அணைக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதல் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ஆலாந்துறை நாதேகவுன்டன்புதூர் பகுதி மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு தீ பரவியது.

சுமார் 150 ஹெக்டேர் பரப்பரளவில் பற்றியெரிந்த தீயை அணைக்கும் பணியில், கோவை, உடுமலை, நீலகிரி, ஈரோடு, சிறுமுகை உள்ளிட்ட வனச்சரகத்தில் இருந்து வந்த சுமார் 250க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.



இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் படி இராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணி நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் சுமார் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு, அதிகளவு தீ பிடித்து எரிந்த 4 இடங்கள் முழுமையாக அணைக்கப்பட்டது.



இந்த விபத்தில், 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மரங்கள், செடிகொடிகள், முழுமையாக தீக்கு இரையாகியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு வரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கூடுதல் பணியாளர்களுடன் 7 ஆவது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாலைக்குள் முழுமையாக தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...