மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சோகம்!

உடுமலை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்த சக்தி குமார் (16) என்ற பிளஸ் 1 மாணவர் தனது நண்பர்கள் 4 பேருடன் ஜோத்தம்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்த போது, மாணவர் சக்தி குமார் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில் தீயணைப்பு துறையினர், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரது உடலை மீட்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன். இவரது மகன் சக்திகுமார் (16). இவர் உடுமலை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அதன்படி அவருடைய வகுப்புத் தோழர்களான மடத்துக்குளத்தை அடுத்த செங்கண்டிபுதூரை சேர்ந்த பிரசன்னா, ஆண்டியக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் உடுமலை கணேஷ் நகரை சேர்ந்த தருண்குமார் ஆகியோருடன் மடத்துக்குளம் அருகே உள்ள ஜோத்தம்பட்டி பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அங்கு செங்கண்டிபுதூரைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் இறங்கி மாணவர்கள் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சக்திகுமார் கிணற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது நண்பர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் சக்திகுமார் கிணற்று நீரில் மூழ்கினார். இதனையடுத்து சம்பவம் குறித்து உடுமலை தீயணைப்பு துறையினர் மற்றும் கணியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி சக்திகுமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் சுமார் 40 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இதனால் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து 3 மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு கிணற்றிலுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சக்திகுமாரின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...