உடுமலையில் கடும் வெயில் எதிரொலி..! - இளநீர் விலை ரூ.40 ஆக உயர்வு!

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் இளநீர் விலை ரூ.40 வரை உயர்ந்துள்ளது. ஆனாலும் விற்பனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என வியாபாரிகள் தகவல்.


திருப்பூர்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இளநீர் விலை ரூ,40 க்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, நுங்கு ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதன் காரணமாக இளநீர் விலையும், விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இளநீர் தற்போது, ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.



இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இளநீர் வியாபாரி ஒருவர் கூறியதாவது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரளவு தண்ணீர் உள்ள பகுதியில் மட்டுமே இளநீர் உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற பகுதியில் உற்பத்தி குறைந்துள்ளது.

இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இளநீர் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...