வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் இளநீர் விலை ரூ.40 வரை உயர்ந்துள்ளது. ஆனாலும் விற்பனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என வியாபாரிகள் தகவல்.
திருப்பூர்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இளநீர் விலை ரூ,40 க்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, நுங்கு ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதன் காரணமாக இளநீர் விலையும், விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இளநீர் தற்போது, ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இளநீர் வியாபாரி ஒருவர் கூறியதாவது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரளவு தண்ணீர் உள்ள பகுதியில் மட்டுமே இளநீர் உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற பகுதியில் உற்பத்தி குறைந்துள்ளது.
இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இளநீர் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, நுங்கு ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதன் காரணமாக இளநீர் விலையும், விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இளநீர் தற்போது, ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இளநீர் வியாபாரி ஒருவர் கூறியதாவது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரளவு தண்ணீர் உள்ள பகுதியில் மட்டுமே இளநீர் உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற பகுதியில் உற்பத்தி குறைந்துள்ளது.
இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இளநீர் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.