உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில், நடைபெற்ற தீ தொண்டு நாள் வார விழாவில், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட தீயணைப்பு துறையினர், தீவிபத்தை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருப்பூர்: உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு துறையினர் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகை பிடிக்க கூடாது.
மேலும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீ விபத்தினை தவிர்க்க கூடிய வழிகள் குறித்து பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழா வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு துறையினர் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகை பிடிக்க கூடாது.
மேலும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீ விபத்தினை தவிர்க்க கூடிய வழிகள் குறித்து பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழா வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.