காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை: கோவை ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தை மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கொடியைக் கையில் ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தை மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கொடியைக் கையில் ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.