மத்திய அரசை கண்டித்தும், எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்தும் திருப்பூரில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும், எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு தொடுத்து வரும் பாஜக அரசை கண்டித்தும், மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், குமரன் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாக வந்து, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.

இதையடுத்து போலீசார் அத்துமீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும், எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு தொடுத்து வரும் பாஜக அரசை கண்டித்தும், மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், குமரன் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாக வந்து, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அத்துமீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.