ஞான நிலையை எட்டிய வயதில் மு.க.ஸ்டாலின் முதல்வராகி இருக்கிறார்..! - நடிகர் தம்பி ராமையா புகழாரம்

சிறு படம் தயாரிப்பவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் என்பது காதில் தேன் வந்து பாய்வதைப் போன்றது. ஞான நிலை எட்டிய வயதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். அந்த ஞானத்தின் விளைவாக தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும், என்று நடிகர் தம்பி ராமையா தெரிவித்தார்.


கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற முதல்வர் புகைப்பட கண்காட்சியின் இறுதி நாளில் நடிகர் தம்பி ராமையா பார்வையிட்டார்.

கோவை வஉசி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தமிழக முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்டு பார்வையிட்ட நடிகர் தம்பி ராமையா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது:

வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகங்களில் படித்திருக்கிறோம், பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம், காட்சிகளாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் வாழும் தலைவர் ஒருவருடைய வரலாற்றைக் கண் முன்னால் பார்ப்பது என்பது மிகப்பெரிய கொடுப்பனை.

இந்த ஏழு நாட்களும் முண்டியடித்து கொண்டு இந்த காட்சியை பார்த்துச் சென்றவர்களெல்லாம் ஒரு சுகமான காட்சியைப் பார்த்ததாகத் தான் சொல்வார்கள்.

ஒரு இரவிலிருந்து விட்டு மறு இரவில் காணாமல் போவது வெற்றி அல்ல, ஒரு இடத்தில் அழுத்தம் திருத்தமாக வந்து அமர்வதற்கு மிகப்பெரிய தியாகம் இருக்க வேண்டும். கண்ணீர் விட்டிருக்க வேண்டும், துன்பங்களை அனுபவித்து இருக்க வேண்டும், குடும்பத்தை நேசிக்கின்ற ஒரு பண்பு இருக்க வேண்டும்.

இந்த கண்காட்சியை பார்க்கும்போது தமிழ்நாட்டின் உடைய முதல்வர் ஸ்டாலின் ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல எனத் தெரிகிறது.

இந்த கண்காட்சியின் நிறைவுப் பகுதி வரும்போது எனக்கே நிகழ்வு ஏற்படுகிறது. 1976 இல் நெருக்கடியான காலகட்டத்தில் நிறைய தலைவர்கள் எழுதிக் கொடுத்துவிட்டு விலகிச் சென்று விட்டனர், அவ்வாறு விலை கொடுத்து விட்டு விலகி சென்று இருக்கலாம். ஆனால் எழுதி கொடுக்க மறுத்ததன் விளைவு சிட்டிபாபு என்பவரது உயிர் போகிறது.

அங்கு தான் ஸ்டாலின் என்ற மகத்தான தலைவன் உருவாகிறான். அவ்வளவு சுலபத்தில் ஸ்டாலின் அந்த இடத்தில் அமரவில்லை. முத்தமிழறிஞர் கலைஞரை கைது செய்த போது அதிமுகவினரும் அழுதார்கள். அதேபோன்று கலைஞருக்கு இடம் கிடைத்து விட்டது என்ற போது தமிழகமே வந்தது.

சிறு படம் தயாரிப்பவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம் என்பது காதில் தேன் வந்து பாய்வதைப் போன்றது. ஞான நிலை எட்டிய வயதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். அந்த ஞானத்தின் விளைவாகத் தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...