கோவை ஈஷாவில்‌ களைக்கட்டிய தமிழ்‌ புத்தாண்டு கொண்டாட்டம்!

தமிழ்‌ புத்தாண்டை ஒட்டி ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள்‌ பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர்‌. தமிழகம்‌ முழுவதும்‌ இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள்,‌ தேவியை தரிசனம்‌ செய்து அருளைப்‌ பெற்றனர்‌.


கோவை: கோவை ஈஷா மையத்தில் தமிழ்புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



கோவை ஈஷா மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட லிங்க பைரவி திருமேனியை ஆதியோகி சிலையிலிருந்து ரதத்தில்‌ வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்‌.



இதை தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா மற்றும்‌ ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின்‌ பக்தி பாடல்களுடன்‌ கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர்‌, லிங்க பைரவியில்‌ சிறப்பு அபிஷேகமும்‌ நடைபெற்றது.

இதுதவிர, பக்தி நயம்‌ ததும்பும்‌ தேவாரப்‌ பாடல்களை தமிழக கிராமங்கள்‌ தோறும்‌ கொண்டு சேர்க்க வேண்டும்‌ எனக் கடந்த மஹாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார்‌. அதன்‌ ஒரு பகுதியாக, ஆதியோகி முன்பு தேவாரப்‌ பாடல்களை அர்ப்பணிக்கும்‌ 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும்‌ வழங்கப்படும்‌ என அறிவித்தார்‌.



இதன்‌ தொடக்கமாக, சென்னையைச்‌ சேர்ந்த 9 வயது சிறுவன்‌ கரிய நாராயணன்‌ தோடுடைய செவியன்‌, பித்தா பிறைதடி, வானனை மதி கடிய போன்ற தேவாரப்‌ பாடல்களை ஆதியோகிக்கு அர்ப்பணித்து அவரின்‌ திருமேனியை பரிசாக பெற்றார்‌.



9 வயதே ஆன இச்சிறுவன்‌ தனது தந்‌தை ஹரிஹரன்‌ சிவராமனிடமிருந்து 5 வயது முதல்‌ கர்நாடக சங்கீதம்‌ கற்று வருகிறார்‌. இவர்‌ தூர்தர்ஷன்‌ பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும்‌ பல்வேறு கோவில்‌ திருவிழாக்களிலும்‌ பக்தி பாடல்கள்‌ பாடியுள்ளார்‌.

அவருடன்‌ சேர்ந்து ஏராளமான குழந்தைகள்‌ தேவாரம்‌ பாடி பரிசுகள்‌ பெற்றனர்‌. முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும்‌ இசைக்கப்பட்டது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...