மூலனூர் அருகே சரக்கு வாகனத்தின் பின்சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி!

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே சரக்கு வாகனத்தில் ஏறி 8 வயது சிறுவன் எஸ்வந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடிரென வாகனம் ஓட ஆரம்பித்ததால், பின்சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர், இவரது மனைவி மற்றும் 8 வயது மகன் எஸ்வந்த் ஆகியோருடன் மூலனூர் அருகே உள்ள ஆலம்பாளையம் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

நேற்றிரவு இரவு 8 மணி அளவில் சரவணன் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்தனர். சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது டாட்டா ஏஸ் வாகனத்தின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதமாக டாட்டா ஏஸ் வாகனம் கிளம்பியது. இதனால் பின் சக்கரத்தில் சிக்கிய எஸ்வந்த் படுகாயம் அடைந்தான்.

உடனடியாக சிறுவன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் எஸ்வந்த் காலையில் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

டாட்டா ஏஸ் வாகனத்தில் அதன் சாவி இருந்ததும், வாகனம் கியரில் இருந்ததுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...