கோவை ஊராட்சிச் செயலாளர்களை மிரட்டி பணம் பறிப்பு - 55 வயது முதியவர் கைது!

கோவை கிணத்துக்கடவு அருகே ஊராட்சி செயலாளர்கள் குறித்து புகார் மனு அனுப்பி மிரட்டல் விடுத்து பணம் பறித்து வந்த ராஜா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 57). இவர் கீரணத்தம் ஊராட்சி அலுவலகத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பினார்.

அதில், ஊராட்சியில் செயலாளராக பணியாற்றும் பாலாஜி, போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்து உள்ளார். அவரது ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எனக்கு தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக ராஜாவை அழைத்து ஊராட்சி செயலாளரான பாலாஜி விவரம் கேட்டார். அதற்கு அவர், நான் இவ்வாறு புகார் மனு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும், இல்லையென்றால் உங்களது வேலை பறிபோகும் அளவிற்கு உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்புவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன பாலாஜி, அவரிடம் ரூ.75 ஆயிரம் வழங்கினார். அதன்பிறகும், அவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி செயலாளர்களிடம், இதுபோன்று அந்தந்த ஊராட்சிகளுக்கு புகார் மனு அனுப்பி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் பெண் ஊராட்சி செயலாளர்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அச்சுறுத்தி பணம் பறித்தல் உள்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...